தமிழ்த்துறையின் வளர்நிலைகள்:
பார்போற்றும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறை மிகப்பழமையான வரலாற்றினைக் கொண்ட துறையாகும். 1842- ல்
தொடங்கப்பட்டப் பச்சையப்பன் கல்லூரியில் முதன் முதலில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிப்பாடங்கள்
தொடங்கப்பட்டன. ஆகையால் கல்லூரியின் 175-வது ஆண்டு கால வரலாற்றினை தமிழ்த்துறைத் தன்னகத்தே கொண்டுள்ளது
எனலாம்.
தமிழ்த்துறையின் அமைப்பும் சிறப்பும்:
தமிழகத்தில் பழமை வாய்ந்த சிறந்த கல்லூரிகளில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரி தனிச் சிறப்புடையது. அதன்
சிறப்புக்குக் காரணமாகத் திகழ்வதில் பெரும்பங்கு தமிழ்த்துறையை சார்ந்தது என்றால் மிகையன்று. இந்திய
அளவிலேயே முதன் முதலாக இளங்கலை (BOL - Bachelor of Oriental Language) தமிழுக்கான பாடப்பிரிவினை
விடுதலைக்கு முன்பே முதன்முதலில் தொடங்கிய பெருமை இக்கல்லூரியின் தமிழ்த்துறையையே சாரும். 1940 -ஆம்
ஆண்டு B.A. (Honours) மு.வ. அவர்களின் தலைமையின் கீழ் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதுகலை (M.A.)
இளம் முனைவர் (M. Phil.) முனைவர் (Ph.D.) ஆகிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டு
வருகின்றது
தமிழ்த்துறையின் அமைப்பும் சிறப்பும்:
பச்சையப்பன் கல்லூரியின் முதல் தமிழ்த் துறைத்தலைவர் செல்வக்கேசவராய முதலியார் ஆவார். அவர் தமிழ்,
தெலுங்கு, மலையாளம், வடமொழி, ஆங்கிலம் எனும் 5 மொழிகளின் புலமை பெற்று இருந்தது இதற்கு சான்றாகும்.
இவரைத் செல்வக்கேசவராய முதலியார் தொடர்ந்து மோசூர் கந்தசாமி, டாக்டர் மு. வரதராசனார், டாக்டர் அ.மு.
பரமசிவானந்தம் அவர்கள் தலைமையில் தமிழ்த்துறை மிக சிறந்த வளர்ச்சி அடைந்திருந்தது. இக்காலத்தை
தமிழ்த்துறையின் பொற்காலம் எனலாம்.
தமிழ்த்துறையின் சாதனைகள் செயல்பாடுகள்:
முனைவர் வா.மு.சே. ஆண்டவர் அவர்களால் பல்கலைக் கழக
மானியக்குழுவின்நிதியுதவியுடன்2001-2002-ல்ரூ.75,000/- மதிப்பில் கணினியும், தமிழ் இலக்கணமும் எனும்
தலைப்பில் ஆய்வு நிகழ்த்தப்பட்டு ஆய்வேடு ஒப்படைக்கப்பட்டது.